விசாகபட்டினம் விஷ வாயு கசிவு வழக்கு - எல்.ஜி. பாலிமர்ஸ் நிறுவனம் மேல்முறையீடு

விசாகபட்டினத்தில் விஷ வாயு கசிந்து உயிரிழப்பு ஏற்படுத்திய விவகாரத்தில் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்யும் அதிகாரம் தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு உண்டு என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Update: 2020-06-15 14:05 GMT
விசாகபட்டினத்தில் விஷ வாயு கசிந்து உயிரிழப்பு ஏற்படுத்திய விவகாரத்தில் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்யும் அதிகாரம் தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு உண்டு என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. விஷவாயு கசிவு  தொடர்பாக 50 கோடி ரூபாய் வைப்புத்தொகை செலுத்த எல்.ஜி. பாலிமர்ஸ் நிறுவனத்திற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து அந்த  நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஆந்திர பிரதேச உயர்நீதிமன்றத்தில் எல்.ஜி. பாலிமர்ஸ் செலுத்திய 50 கோடி ரூபாய் வைப்பு தொகையை செலவழிப்பதை 10 நாட்களுக்கு நிறுத்தி வைக்கவும் உத்தரவிட்டது.
Tags:    

மேலும் செய்திகள்