கேரளாவில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று துவக்கம் - மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய உத்தரவு

கேரளாவில் 144 தடை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு இருந்த 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று துவங்குகின்றன.

Update: 2020-05-26 03:43 GMT
கேரளாவில் 144 தடை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு இருந்த 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று துவங்குகின்றன. மாநிலம் முழுவதும் 13 லட்சத்து 72 ஆயிரம் பேர் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதுகின்றனர். தேர்வு அறைக்குள் செல்லும் போது  மாணவர்கள் முகக்கவசம் அணியவும், கைகளை கிருமிநாசினி கொண்டு கழுவவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.  ஒரு வகுப்பறைக்கு 20 மாணவர்கள் மட்டுமே அமர்ந்து தேர்வு எழுதுவார்கள் என்று கேரள அரசு தெரிவித்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்