கோவா மாநிலத்தில் சிக்கியுள்ள 200 தமிழர்கள் : உணவு, இருப்பிடம் வழங்க தமிழக அரசு ஏற்பாடு

கோவா மாநிலத்தில் சிக்கியுள்ள தமிழகத்தை சேர்ந்த 200 பேருக்கு, உணவு தங்குமிடத்தை தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

Update: 2020-03-30 14:47 GMT
கோவா மாநிலத்தில் சிக்கியுள்ள தமிழகத்தை சேர்ந்த 200 பேருக்கு, உணவு தங்குமிடத்தை தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் பகுதியை சேர்ந்த 200 பேர், கோவாவுக்கு மீன் பிடி பணிக்காக சென்றுள்ளனர். ஊரடங்கு உத்தரவு காரணமாக தமிழகம் திரும்ப முடியாமல் தவிக்கும் அவர்களுக்கான ஏற்பாடுகளை செய்து தருமாறு அந்த தொகுதி எம்.பி. கெளதம் சிகாமணி கோரிக்கை வைத்தார். இதை ஏற்று தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்