ஐயப்பன் கோயில் ஆபரணங்களை பாதுகாப்பதில் சிக்கல்? - ஆபரண பட்டியலை தயாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆபரணங்கள் குறித்த விவரப்பட்டியலை அளிக்க கேரள உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ராமசந்திர நாயரை நியமித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-02-07 10:51 GMT
சபரிமலை ஐயப்பனுக்கு, ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவின் போது, பந்தளராஜா குடும்ப பாதுகாப்பில் உள்ள திருவாபரணம் எனப்படும் ஆபரணங்கள் அலங்கரிக்கப்படுகின்றன. திருவிழாவுக்கு பின் இந்த ஆபரணங்கள் மீண்டும் பந்தளராஜா குடும்பத்தினரிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்படுவது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில், இந்த ஆபரணங்களின் பாதுகாப்பு தொடர்பாக பந்தளராஜா குடும்பத்தில் பிரச்சினை எழுந்துள்ளது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில்,  ஆபரணங்கள் குறித்து பட்டியலைக் கேட்ட நீதிமன்றம், அவை தொடர்பான பட்டியலை தயாரிக்க கேரள உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி சி.என். ராமசந்திர நாயரை நியமித்து வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தது.

Tags:    

மேலும் செய்திகள்