"நடிகை ரோஜா மீது காலணி வீச முயற்சி"

ஆந்திரா மாநிலம் நகரி சட்டமன்ற உறுப்பினர் நடிகை ரோஜா மீது அவரது கட்சியை சேர்ந்தவர்களே காலணியால் தாக்க முயன்ற சம்பவம், சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2020-01-06 12:23 GMT
ஆந்திரா மாநிலம் நகரி சட்டமன்ற உறுப்பினர் நடிகை ரோஜா மீது அவரது கட்சியை சேர்ந்தவர்களே காலணியால் தாக்க முயன்ற சம்பவம், சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சித்தூர் மாவட்டம் கே.வி.புரத்தில் புதிதாக கட்டப்பட்டு உள்ள  கிராம தலைமை செயலகத்தை திறந்து வைப்பதற்காக அங்கு சென்றார். அப்போது அந்த ஊரை சேர்ந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை பிரமுகர் பிரதாப் ஆதரவாளர்கள், ரோஜாவின் காரை வழிமறித்து,காலணியால் தாக்க முயன்றனர். இதையடுத்து போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, ரோஜாவின் காரை பத்திரமாக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் ஆந்திராவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்