"பணத்திற்கு பதிலாக மீண்டும் இலவச அரிசி வழங்குங்கள்" - புதுச்சேரியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கோரிக்கை

புதுச்சேரியில் அரசு சார்பில் வழங்கப்படும் பணத்திற்கு பதிலாக மீண்டும் இலவச அரிசியை வழங்க வேண்டும் எனக் கோரி பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-11-20 12:56 GMT
புதுச்சேரியில் அரசு சார்பில் வழங்கப்படும் பணத்திற்கு பதிலாக மீண்டும் இலவச அரிசியை வழங்க வேண்டும் எனக் கோரி பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 20 கிலோ இலவச அரிசியை புதுச்சேரி அரசு வழங்கி வந்த நிலையில் அதில் ஊழல் நடப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து அரிசிக்கு பதிலாக பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்துமாறு ஆளுநர் உத்தரவிட்டதை தொடர்ந்து பணம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், தங்களுக்கு மீண்டும் அரிசி வழங்க வேண்டும் என கோரி பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
Tags:    

மேலும் செய்திகள்