ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கு: "ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி" - சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம்

ஐ. என். எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Update: 2019-10-15 19:32 GMT
சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, அமலாக்கத்துறையின் மனுவை விசாரித்த நீதிபதி அஜய்குமார் குகர், சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.  வேண்டுமானால் சிதம்பரத்தை  நீதிமன்ற வளாகத்தில் 30 நிமிடங்கள் விசாரிக்க அனுமதி வழங்குவதாகவும் நீதிபதி தெரிவித்தார். ஆனால், அவரை திகார் சிறையில் வைத்து விசாரிப்பதாக, அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து, அவரிடம் திகார் சிறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர். விசாரணை நடத்திய பிறகு தேவைப்பட்டால் சிதம்பரத்தை கைது செய்யலாம் என்றும் அமலாக்கத்துறைக்கு நீதிபதி அனுமதி வழங்கினார். அதேநேரத்தில் சிதம்பரத்தை கைது செய்த 24 மணி நேரத்தில், டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார்.

இதனிடையே, ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் சிபிஐ தன்னை கைது செய்ததற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சிதம்பரம் தொடர்ந்த ஜாமீன் மனு, நாளை மதியம் இரண்டு மணிக்கு விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்