ஆந்திர உயர்நீதிமன்ற வளாகத்துக்குள் புகுந்த மழைநீர் : கோப்புகளை பத்திரப்படுத்தும் பணியில் நீதிமன்ற ஊழியர்கள்

ஆந்திர மாநில தலைநகர் அமராவதியில் உள்ள அம்மாநில உயர்நீதிமன்ற கட்டடத்தில் தொடர் மழை காரணமாக நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளது.

Update: 2019-09-19 10:15 GMT
ஆந்திர மாநில தலைநகர் அமராவதியில் உள்ள அம்மாநில உயர்நீதிமன்ற கட்டடத்தில் தொடர் மழை காரணமாக நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளது. மழைநீரும் உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் புகுந்துள்ளதால், வழக்கு ஆவணங்கள் மற்றும் கோப்புகளை பத்திரப்படுத்தும் பணியில் நீதிமன்ற ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, தரமற்ற பொருட்களை கொண்டு சந்திரபாபு நாயுடு கட்டடங்களை கட்டி வந்ததாக தாங்கள் கூறிய குற்றச்சாட்டு தற்போது உறுதியாகி உள்ளதாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்