அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் வேலை நிறுத்தம் : நிலுவையில் உள்ள 3 மாத சம்பளத்தை வழங்க கோரிக்கை

நிலுவையில் உள்ள 3 மாத சம்பளத்தை வழங்க கோரிக்கை

Update: 2019-09-17 20:32 GMT
நிலுவையில் உள்ள மூன்று மாத சம்பளத்தை உடனடியாக வழங்கக் கோரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதுச்சேரி அரசு பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனுடன் கடந்த ஆண்டு அறிவித்த போனஸ் தொகையை வழங்க வேண்டும் என  இரண்டு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி பேருந்துகளை இயக்காமல் பனிமனையில் நிறுத்தி தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். புதுச்சேரியில் அரசு பேருந்துகளை விட தனியார் பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்படுவதால் இந்த வேலை நிறுத்தமானது  பயணிகளுக்கு பெரிய அளவில் பதிப்பை ஏற்படுத்தவில்லை. 
Tags:    

மேலும் செய்திகள்