அருண்ஜெட்லியின் உடலுக்கு யமுனைக் கரையில் நாளை இறுதிச் சடங்கு

அருண்ஜெட்லியின் உடலுக்கு குடும்ப வழக்கப்படி நாளை யமுனை நதிக்கரையில் இறுதிச் சடங்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2019-08-24 19:31 GMT
உடல்நலக் குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமான அருண் ஜெட்லியின் உடல், தெற்கு டெல்லியின் கைலாஷ் காலனியில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அரசியல் தலைவர்கள், அதிகாரிகள், உறவினர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அருண்ஜெட்லியின் உடல் நாளை காலை 10 மணிக்கு பா.ஜ.க. அலுவலகத்தில் கட்சியினர் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. பின்னர், 2 மணிக்கு இறுதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, யமுனை ஆற்று கரையில் உள்ள நிகம்போட் காட் பகுதியில் குடும்ப வழக்கப்படி இறுதிச் சடங்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்