"பீகார் முன்னாள் முதலமைச்சர் ஜெகந்நாத் மிஸ்ரா மறைவுக்கு 3 நாள் துக்கம் அனுசரிப்பு" - பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் அறிவிப்பு

பீகார் முன்னாள் முதலமைச்சரான ஜெகன்நாத் மிஸ்ராவின் மறைவை ஒட்டி, மூன்று நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என அந்த மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.

Update: 2019-08-19 10:10 GMT
பீகார் முன்னாள் முதலமைச்சரான ஜெகன்நாத் மிஸ்ராவின் மறைவை ஒட்டி, மூன்று நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என அந்த மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். மூத்த காங்கிரஸ் நிர்வாகியான ஜெகந்நாத் மிஸ்ரா, மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்தவர். அவசர நிலை காலத்தை பார்த்தவர். பல்வேறு அரசியல் சூழலை கடந்த ஜெகந்நாத் மிஸ்ரா, பீகார் மாநில முதலமைச்சராக மூன்று முறை பதவி வகித்துள்ளார். 82 வயதான அவர் உடல்நலக் குறைவால் காலமானதை தொடர்ந்து, மாநில அரசின் மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறும் என முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்