அயர்ன் பாக்ஸ் வடிவில் தங்கம் கடத்த முயற்சி - விமான பயணியிடம் ரூ.3.5 கோடி தங்கம் பறிமுதல்

செம்ஷாபாத் விமான நிலையத்தில் ஒன்பதரை கிலோ எடையுள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Update: 2019-08-11 12:57 GMT
தெலங்கானா மாநிலம், செம்ஷாபாத் விமான நிலையத்தில், ஒன்பதரை கிலோ எடையுள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. துபாயில் இருந்து வந்த விமான பயணிகளிடம் சுங்கம் மற்றும் புலனாய்வுத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்து தப்பியோட முயன்ற ஒரு பயணியை, அதிகாரிகள் சுற்றிவளைத்து கைது செய்தனர். தொடர்ந்து அவரது உடைமைகளை ஆய்வு செய்த அதிகாரிகள், 'அயர்ன் பாக்ஸ்' வடிவில் தங்கத்தை உருக்கி கொண்டு வந்திருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து அந்த பயணியிடம் இருந்து மூன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்