கேரளாவில் மீண்டும் ரெட் அலர்ட் எச்சரிக்கை

கேரளாவில் கனமழை குறித்து மீண்டும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2019-07-17 03:22 GMT
கேரளாவில் கனமழை குறித்து மீண்டும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வரும் 18 ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இடுக்கி, மலப்புறம், கண்ணூர், எர்ணாகுளம், திருச்சூர் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீனவர்களும் கடலோர மக்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என கேரள அரசின் இயற்கை பேரிடர் மேலாண்மை அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்