சென்னையின் வறட்சிக்கு மோசமான அரசே காரணம் - கிரண்பேடி

சென்னையில் கடும் வறட்சி ஏற்பட்டதற்கு மோசமான ஆட்சியே காரணம் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி குற்றம் சாட்டினார்.

Update: 2019-06-30 17:09 GMT
சென்னையில், கடும் வறட்சி ஏற்பட்டதற்கு மோசமான ஆட்சியே காரணம் என, புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி குற்றம் சாட்டினார். சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்டுள்ள செய்தியில், இந்தியாவின் 6வது பெரிய நகரமான சென்னையில், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளத்தில் மூழ்கியதை சுட்டிக் காட்டியுள்ளார். அதே சென்னை  தற்போது, வறட்சி ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ள கிரண்பேடி, இதற்கு மோசமான ஆட்சியும், அலட்சிய அதிகாரமும் காரணம் என்று கூறியுள்ளார். மக்களின் சுயநல எண்ணமும், கோழைத்தனமான அணுகுமுறையும் ஒரு காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்
Tags:    

மேலும் செய்திகள்