மேடையில் ஸ்மிருதி இரானியின் காலை பிடித்து கதறிய பெண்...

நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியில் மேடை ஏறிய பெண் ஒருவர் ஸ்மிருதி இரானியின் காலை பிடித்தபடி விடாமல் கதறி அழுதார்.

Update: 2019-06-22 21:38 GMT
உத்தரபிரதேச மாநிலம் அமேதி மக்களவை தொகுதி எம்.பியும், மத்திய அமைச்சருமான ஸ்மிருதி இராணி தலைமையில் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி, அங்கு  நடைபெற்றது. அப்போது மேடை ஏறிய பெண் ஒருவர், ஸ்மிருதியின் காலை பிடித்தபடி விடாமல் கதறி அழுதார். இதையடுத்து அவரை தூக்கி விட முயன்றும் அப்பெண் அவரது காலைப் பிடித்தபடியே இருந்ததால், அருகில் இருந்தவர்களின் உதவியுடன் அப்பெண்ணை அமைச்சர் எழுப்பினார். அவரிடம் விசாரித்தபோது, தனது நிலத்தை குடும்பத்தினர் பறித்துக்கொண்டதாகக் கூறியதை அடுத்து, உடனடியாக அதிகாரிகளை அழைத்த அமைச்சர், நடவடிக்கை எடுக்க  உத்தரவிட்டார். இச்சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்