அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் விளக்கு பூஜை...

புதுச்சேரி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2019-06-10 02:34 GMT
புதுச்சேரி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சாமி தரிசனம் செய்தனர். திருவிளக்கு பூஜையையொட்டி உற்சவர் அம்மன் புதிய பட்டாடை மற்றும் பல்வேறு வண்ண ஆபரணங்கள், மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதனைத்தொடர்ந்து ஆலய வளாகத்தினுள் மாங்கல்யம் நிலைக்கவும், நோயின்றி வாழவும், விவசாயம் செழிக்கவும், திருமண பாக்கியம் கை கூடவும், கல்வியில் தங்களது பிள்ளைகள் சிறந்து விளங்க வேண்டியும், ஏராளமான பெண்கள் மஞ்சள், குங்குமம், பூ போன்றவற்றால், அம்மனை தரிசித்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்