ரபேல் விமான ஒப்பந்தம் தொடர்பான சீராய்வு மனு

ரஃபேல் போர் விமானம் தொடர்பான, மறு சீராய்வு மனுவுக்கு, வரும் சனிக்கிழமைக்குள் மத்திய அரசு பதில் அளித்திட வேண்டும் என, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Update: 2019-04-30 11:01 GMT
ரஃபேல் போர் விமானம் தொடர்பான, மறு சீராய்வு மனுவுக்கு, வரும் சனிக்கிழமைக்குள் மத்திய அரசு பதில் அளித்திட வேண்டும் என, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மறு சீராய்வு மனு உச்சநீதின்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் முன்பு, விசாரணைக்கு வந்த போது, பதில் மனு தாக்கல் செய்ய, மத்திய அரசு 4 வார கால அவகாசம் கோரியது. ஆனால் இதனை நிராகரித்த, உச்சநீதிமன்றம், வருகிற 4 ஆம் தேதிக்குள், பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை 6 ந்தேதிக்கு ஒத்தி வைத்தது. மேலும், தவறான தகவல்களை அளித்ததற்காக மத்திய அரசுக்கு எதிராக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் மீதும் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்