பிரதமர் நாளை வேட்பு மனு தாக்கல் - பலத்த பாதுகாப்பு

நாடாளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் வாரனாசி தொகுதியில் பிரதமர் மோடி மீண்டும் போட்டியிட உள்ளார்.

Update: 2019-04-24 22:46 GMT
நாளை 26ம் தேதியன்று அவர் வேட்புமனு தாக்கல் செய்கிறார். இதையொட்டி, வாரணாசிக்கு இன்று செல்லும் பிரதமர் மோடி பிரமாண்ட ஊர்வலத்தில் பங்கேற்கிறார். இதில், பாஜக கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் மாநில முதலமைச்சர்கள் கலந்து கொள்வார்கள் என கூறப்படுகிறது. இது தவிர கங்கை நதியிலும் புனித நீராடுவதோடு காசி விஸ்வநாதர் கோவிலிலும் பிரதமர் மோடி வழிபாடு நடத்துகிறார். மோடியின் வாரணாசி வருகையையொட்டி அந்த நகரம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்