மிசோரம் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த ராஜசேகரன்

திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல்

Update: 2019-03-08 13:26 GMT
மிசோரம் மாநில ஆளுநர்  பொறுப்பை  கும்மனம்  ராஜசேகரன் ராஜினாமா செய்வதாக அறிவித்த நிலையில், அவரது ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக் கொண்டுள்ளார்.நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி, கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம் தொகுதியில் பாஜக வேட்பாளராக ராஜசேகரன் களம் இறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக களம் இறங்கும் சசி தரூரை எதிர்த்து அவர் போட்டியிட உள்ளார்.இந்த நிலையில் அசாம்  மாநில ஆளுநர்  ஜக்தீஷ் முகி,மிசோரம் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பை  வகிப்பார் என குடியரசுத் தலைவர் அறிவித்துள்ளார்..  

Tags:    

மேலும் செய்திகள்