"புதிய இந்தியாவை கட்டமைப்பதில் மகளிர் பெரும் பங்களிப்பு" - பிரதமர் மோடி பெருமிதம்

புதிய இந்தியாவை கட்டமைப்பதில் மகளிர் பெரும் பங்களிப்பு அளித்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.;

Update: 2019-03-08 08:06 GMT
உத்தரப்பிரதேச மாநிலம் வாராசியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். தாய்மார்கள், சகோதரிகளுக்கு மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்த அவர், புதிய இந்தியாவின் கலாச்சாரத்தை உருவாக்குவதில் மகளிரின் பங்கு மிக அவசியம் என்று கூறினார். ராணுவத்தின் சில துறைகளில் மகளிருக்கு நிரந்தர கமிஷன்கள் அமைக்க அண்மையில் முடிவு செய்யப்பட்டதாக தெரிவித்தார். ராணுவ ஜெட் விமானங்களில் மகளிரும் பறப்பதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். முன்னதாக வாராணிசியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தில் பிரதமர் மோடி தரிசனம் செய்தார். 
Tags:    

மேலும் செய்திகள்