"புல்வாமா தாக்குதலை விட மிகப்பெரிய தாக்குதலை நடத்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு திட்டம்" - உளவுத்துறை எச்சரிக்கை

புல்வாமா தாக்குதலை போலவே மேலும் சில தாக்குதல்களை நடத்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2019-02-21 08:48 GMT
புல்வாமா தாக்குதலை போலவே மேலும் சில தாக்குதல்களை நடத்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 14 ஆம்தேதி ஜெய்ஷ் இ முகமது அமைப்பினர் நடத்திய கொடூர தாக்குதலில், 40க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எப். வீர‌ர்கள் கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து தற்போது அதைவிட பெரிய தாக்குதலுக்கு திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை படையினருக்கு புதிய எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், காஷ்மீரில் மீண்டும் பதற்றமான சூழல் நிலவுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்