தென்கொரியா புறப்பட்டார் பிரதமர் மோடி

அதிபர் மூன்ஜேயுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை : சியோல் அமைதி விருதை பெறுகிறார் மோடி

Update: 2019-02-21 01:52 GMT
இரண்டு நாள் அரசுமுறை பயணமாக, பிரதமர் நரேந்திர மோடி தென்கொரியா புறப்பட்டு சென்றுள்ளார்.  அங்கு அந்நாட்டு அதிபர் மூன் ஜேயை சந்தித்து இரு தரப்பு ஒத்துழைப்பு குறித்து மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார். பின்னர் 
தென்கொரிய தொழிலதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்களை சந்தித்து பிரதமர் பேசுகிறார். பின்னர் நாளை, 2018ம் ஆண்டுக்கான சியோல் அமைதி  விருதை பிரதமர் மோடி பெற்று கொள்கிறார். தேசிய மற்றும் சர்வதேச அளவிலான 
பிரதமர்  மோடியின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் சியோல் அமைதி விருது அவருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது
Tags:    

மேலும் செய்திகள்