ரூ.1.5 கோடி செம்மரக் கட்டைகள் பறிமுதல்

காரில் கடத்தப்பட்ட 10 செம்மரக் கட்டைகள் பறிமுதல்

Update: 2019-01-13 12:28 GMT
ஆந்திராவில் கார் ஓட்டுனரின் தகவலை அடுத்து கடத்தலுக்கு தயாராக இருந்த ஒன்றை கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரக் கட்டைகள் பறிமுதல்  செய்யப்பட்டுள்ளன. செம்மரக் கட்டைகள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து சித்தூர் மாவட்டம் நென்ரகுண்டா பகுதியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த கார் ஒன்று நிற்காமல் சென்றது. அதை மடக்கிப் பிடித்த போலீசார், அதிலிருந்த 10 செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்தனர். அரக்கோணத்தை சேர்ந்த கார் ஓட்டுநரை பிடித்த போலீசாரின் விசாரணை மூலம் நென்ரகுண்டா வனப்பகுதியில் பதுக்கி வைத்திருந்த ஒரு டன் 85 கிலோ அளவிலான செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்தனர். மேலும், அதில், தொடர்புடைய முக்கியப்புள்ளிகள் விரைவில் சிக்குவார்கள் என்று தெரிகிறது.
Tags:    

மேலும் செய்திகள்