100 ஆண்டுகள் பழமையான ரயில் நிலையத்தை புதுப்பித்தல்...

கேரளாவில் மகாராஜா ராமா வர்மாவால் கட்டப்பட்ட ரயில்வே நிலையத்தை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

Update: 2018-12-08 08:44 GMT
கேரளாவில் மகாராஜா ராமா வர்மாவால் கட்டப்பட்ட ரயில்வே நிலையத்தை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. எர்ணாகுளத்தில் சுமார் 42 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள  இந்த ரயில் நிலையத்தை, புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக மத்திய அரசு சுமார் ஒன்றரை கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ரயில் இயக்கப்பட்டால் அதன் அருகே உள்ள மங்களவனம் பறவைகள் சரணாலத்தில் உள்ள பறவைகளின் வாழ்விடம் பாதிக்கப்படும் என சிலர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மீண்டும் ரயில் இயக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்