கல்யாண சாப்பாடு சாப்பிட்டவர்களுக்கு நேர்ந்த சோகம் : 253 பேர் மருத்துவமனையில் அனுமதி

உத்தரகாண்டில் உணவு ஒவ்வாமை காரணமாக மூன்று பேர் உயிரிழந்துள்ள நிலையில், 253 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2018-12-02 09:47 GMT
உத்தரகாண்டில் உணவு ஒவ்வாமை காரணமாக மூன்று பேர் உயிரிழந்துள்ள நிலையில், 253 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பகேஸ்வர் மாவட்டத்தில் உள்ள பஸ்தி கிராமத்தில் நடைபெற்ற திருமண விழாவில் பரிமாறப்பட்ட உணவை உட்கொண்ட பிறகு செரிமான கோளாறு காரணமாக பொதுமக்கள் அவதிப்பட்டுள்ளனர். மாவட்டத்தை சுற்றிலுள்ள பல்வேறு மருத்துவமனையில் 253 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பலன் அளிக்காமல், ஒரு பெண் மற்றும் 2 குழந்தைகள் உயிரிழந்தது, கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்