சிறு, குறு, நடுத்தர நிறுவன தயாரிப்புகள் அதிகரிப்பு - அமைச்சர் நிர்மலா சீதாராமன்
அரசு நிறுவனங்களுக்கு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களிடம் இருந்து பொருட்கள் கொள்முதல் செய்யப்படுவது, 20 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
அரசு நிறுவனங்களுக்கு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களிடம் இருந்து பொருட்கள் கொள்முதல் செய்யப்படுவது, 20 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கோவை மாநகராட்சி கலையரங்கில் நடந்த சிறு, குறு தொழில்களுக்கானஉதவித்திட்ட துவக்க விழாவில் அவர் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெண்கள் நடத்தும் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் இருந்து 3 சதவீதம் கொள்முதல் செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்.