சபரிமலையில் 144 தடை உத்தரவு மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பு

சபரிமலையில் 144 தடை உத்தரவு மேலும் 3 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

Update: 2018-10-19 16:09 GMT
சபரிமலை விவகாரத்தில், உச்சநீதிமன்றத்தை அணுக தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது. திருவனந்தபுரத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், எடுக்கப்பட்ட முடிவுகளை, தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார், செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.  நீதிமன்றத்தை அணுக முடிவு எடுத்துள்ளதால், பக்தர்கள் அமைதி காக்க வேண்டும் என்று தேவசம் போர்டு, கேட்டுக்கொண்டுள்ளது. இதன் மூலம் போராட்டங்கள் வாபஸ் பெறப்பட்டு, கேரளாவில் நிலவும் பதற்றமான சூழல் குறைய வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே சபரிமலையில், 144 தடை உத்தரவு, மேலும் 3 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்