"2022 க்குள் அனைவருக்கும் வீடு நிச்சயம்" - பிரதமர் மோடி

கடந்த 4 ஆண்டுகளில் மத்திய அரசு, ஒரு கோடியே 25 லட்சம் வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Update: 2018-10-19 08:48 GMT
சீரடி சாய்பாபாவின் நூற்றாண்டு நினைவு தினத்தையொட்டி,  சீரடியில் உள்ள அவரது நினைவிடத்தில் விழா  கொண்டாடப்பட்டது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். முன்னதாக கோயிலுக்கு சென்ற அவர், வழிபாடு நடத்தினார். பின்னர் அவர் பேசுகையில், தனது தலைமையிலான அரசு, 4 ஆண்டுகளில் ஒரு கோடியே 25 லட்சம் வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளதாக தெரிவித்தார். 2022 ஆம் ஆண்டுக்குள் வீடில்லாமல் யாரும் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு மத்திய அரசு செயல்பட்டு வருவதாகவும் மோடி கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்