இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இந்தியா வருகை

3 நாள் அரசு முறை பயணமாக இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இந்தியா வந்துள்ளார்.

Update: 2018-10-18 14:03 GMT
3 நாள் அரசு முறை பயணமாக இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, இந்தியா வந்துள்ளார். தலைநகர் புதுடெல்லியில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியாவின் உளவு அமைப்பான " ரா" தம்மை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டவில்லை என இலங்கை அதிபர் மைத்ரிபால ஸ்ரீ சேனா கருத்து தெரிவித்திருந்த நிலையில், ரணில் விக்ரமசிங்கேவின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. வருகிற சனிக்கிழமை ரணில் விக்ரமசிங்கே, பிரதமர் நரேந்திரமோடியை சந்திக்கிறார். இதுதவிர, உள்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங் மற்றும் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோரையும் ரணில் சந்தித்து, முக்கிய ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்