பதிவு சான்று கேட்டபோது போலீசாருடன் மோதல் :இருசக்கர வாகனத்துக்கு தீ வைத்த குடும்பத்தினர்

உத்தரபிரதேச மாநிலம் டியோரியா பகுதியில், இருசக்கர வாகனத்தில் சென்றவரிடம் போலீஸார் பதிவு சான்றை கேட்டபோது தகராறு ஏற்பட்டது.

Update: 2018-10-14 08:19 GMT
உத்தரபிரதேச மாநிலம் டியோரியா பகுதியில், இருசக்கர வாகனத்தில் சென்றவரிடம் போலீஸார் பதிவு சான்றை கேட்டபோது தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, அவரது இல்லத்துக்கு சென்று, அந்த நபரிடம் பதிவு சான்று கேட்ட போலீஸாரிடம் மீண்டும் தகராறு செய்த அந்த இளைஞரின் குடும்பத்தினர், திடீரென இருசக்கர வாகனத்தின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தனர். அப்போது, போலீஸ் அதிகாரி அதனைத் தடுக்க முயன்றபோது, அவரை தள்ளிவிட்டு அவரை மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்