2019 ஜனவரியில் சந்திராயன் - விக்ரம் சாராபாய் விண்வெளி மைய இயக்குனர் சோம்நாத் தகவல்

2019 ஜனவரி மாதத்தில், சந்திராயன் - 2, செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும் என திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி மைய இயக்குனர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

Update: 2018-10-12 23:42 GMT
கன்னியாகுமரியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், சிறப்பு விண்வெளி கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கில், இஸ்ரோ அதிகாரிகள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்றனர். கருத்தரங்கை இஸ்ரோ தலைவர் டாக்டர். சிவன் காணொளி காட்சி மூலம் துவங்கி வைத்தார். இதில்  விக்ரம் சாராபாய் விண்வெளி மைய இயக்குனர் சோம்நாத் உட்பட பல அதிகாரிகள் பங்கேற்று உரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் 2022 ஆம் ஆண்டுக்குள், இந்தியர்களை விண்வெளிக்கு அனுப்ப இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாக கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்