800 அரசு பணியிடங்களை நிரப்புவது குறித்து முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு

புதுச்சேரியில் காலியாக உள்ள அரசு பணியிடங்களை நிரப்புவது குறித்து முதலமைச்சர் நாராயணசாமி முக்கிய ஆலோசனை நடத்தினார்.

Update: 2018-10-08 12:52 GMT
* புதுச்சேரியில் காலியாக உள்ள அரசு பணியிடங்களை நிரப்புவது குறித்து முதலமைச்சர்  நாராயணசாமி முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கூட்டத்தில் அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, கமலக்கண்ணன், மல்லாடி கிருஷ்ணாராவ் மற்றும் தலைமை செயலாளர் அஷ்வினி குமார் உள்ளிட்ட அரசுத்துறை செயலர்கள் கலந்து கொண்டனர். 

* ஒட்டுமொத்தமாக புதுச்சேரியில் காலியாக  உள்ள 800 பணியிடங்களை  உடனடியாக நிரப்புவது என அப்போது முடிவு செய்யப் பட்டது. பணிநியமனங்களை நேரடி தேர்வு மூலம் நடத்தவும் கூட்டத்தில் ஒப்புதல்அளிக்கப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்