உஸ்பெகிஸ்தான் அதிபர் சவுகாத் மிர்ஜியோயேவுக்கு, குடியரசுத் தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு

இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள உஸ்பெகிஸ்தான் அதிபர் சவுகாத் மிர்ஜியோயேவுக்கு, குடியரசுத் தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Update: 2018-10-01 07:25 GMT
முன்னதாக நேற்று இந்தியா வந்த உஸ்பெகிஸ்தான் அதிபர் சவுகாத் மிர்ஜியோயேவ், தனது மனைவியுடன்  தாஜ்மகாலை பார்வையிட்டார்.  இன்று குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வந்த அவரை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்டோர் வரவேற்றனர். இதையடுத்து, முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து,  பிரதமர் மோடியை சந்தித்து, இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக அவர் பேச்சு நடத்துகிறார்
Tags:    

மேலும் செய்திகள்