19 மணி நேரம் உணவின்றி தவித்த பாதுகாப்புப் படை வீரர்கள்

மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள், ஓடும் ரயிலை நிறுத்தி, உணவு சமைத்து சாப்பிட்ட சம்பவம் நடந்துள்ளது.

Update: 2018-09-21 14:05 GMT
* மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள், ஓடும் ரயிலை நிறுத்தி, உணவு சமைத்து சாப்பிட்ட சம்பவம் நடந்துள்ளது. 
ஜம்முவில் இருந்து மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள்  ஆயிரத்து 500 பேர், ராய்ப்பூருக்கு செல்லும் சிறப்பு ரயிலில் பயணித்தனர். இந்த சிறப்பு ரயில், சில இடங்களில் மட்டுமே  நிற்கும் என்பதால், வீரர்கள் உணவு கிடைக்காமல் தவித்தனர். 

* ஃபரிதாபாத் ரயில் நிலையம் நெருங்கியதும் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து, ரயில்வே அதிகாரிகளிடம்,  பசிக்கும் விவரத்தை வீரர்கள் விளக்கினார்கள். பின்னர், ரயில் நிலையத்திலேயே உணவு சமைத்து சாப்பிட்டனர். இந்த சம்பவம், சமூக வலை தளங்களில் பரவி வருகிறது
Tags:    

மேலும் செய்திகள்