பேறுகாலத்திற்காக தொட்டில் கட்டி தூக்கி வரப்பட்ட பெண்ணுக்கு வழியில் பிறந்த குழந்தை
ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள மலைப் பகுதியில் இருந்து மாவட்ட தலைநகருக்கு போதிய சாலை வசதி இல்லாத நிலையில், 7 கிலோமீட்டர் தொலைவுக்கு பேறுகாலத்திற்காக பெண் ஒருவரை அவரின் உறவினர்கள் தொட்டில் கட்சி தூக்கி வந்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள மலைப் பகுதியில் இருந்து மாவட்ட தலைநகருக்கு போதிய சாலை வசதி இல்லாத நிலையில், 7 கிலோமீட்டர் தொலைவுக்கு பேறுகாலத்திற்காக பெண் ஒருவரை அவரின் உறவினர்கள் தொட்டில் கட்சி தூக்கி வந்துள்ளனர். பாதி தொலைவு வந்த நிலையில் அந்த பெண்ணுக்கு பேறுகால வலி ஏற்பட்டு சுகபிரசவம் நிகழ்ந்துள்ளது. தாயும், சேயும் நலமாக இருந்ததை அடுத்து அவரின் உறவினர்கள் மீண்டும் தங்கள் மலை கிராமத்துக்கே அவர்கள் இருவரையும் அழைத்து சென்றுள்ளனர். கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி இதேபோன்று மற்றொரு பெண் 12 கிலோமீட்டர் தொலைவுக்கு அழைத்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.