"2 தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்தலாம்" - சட்ட ஆணையம் பரிந்துரை

நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்தலாம் என மத்திய அரசுக்கு சட்ட ஆணையம் அறிக்கை அனுப்பியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Update: 2018-08-31 02:36 GMT
நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது தொடர்பாக சென்ற மாதம் முக்கிய அரசியல் கட்சிகளை அழைத்து டெல்லியில் சட்ட ஆணையம் கருத்து கேட்டது. இதைத் தொடர்ந்து சட்ட ஆணையம் மத்திய அரசுக்கு அளித்திருக்கும் அறிக்கையில், நாடாளுமன்ற ம​ற்​றும் சட்டமன்ற தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்தலாம் என தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் சில மாநில அரசுகளின் காலத்தை நீட்டிக்கவும், குறைக்கவும் வேண்டி இருக்கும் என்பதால் அரசியல் சாசனத்தில் திருத்தம் தேவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பு தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத், நாடாளுமன்ற சட்டமன்ற தேர்தல்களை ஒன்றாக நடத்த சாத்தியமில்லை என தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

மேலும் செய்திகள்