சொத்து தகராறு : தந்தையின் கண்ணை மகனே தோண்டி எடுத்த கொடூரம்

குடும்ப சொத்தை தன் பெயருக்கு எழுதிக் கொடுக்காத ஆத்திரத்தில் தந்தையின் கண்ணை மகனே தோண்டியெடுத்த அதிர வைக்கும் சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது.

Update: 2018-08-29 05:49 GMT
பெங்களூரு jp நகர் பகுதியைச் சேர்ந்த பரமேஷ் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மனைவி இறந்ததையடுத்து தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் பரமேஷின் இரண்டாவது மகன் சேத்தன், குடும்ப சொத்தை தன் பெயருக்கு எழுதிக் கொடுக்குமாறு தந்தையிடம் கேட்டுள்ளார். இதற்கு பரமேஷ் ஒப்புக் கொள்ளாததால் அவருக்கு வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் பரமேஷ் சொத்தை எழுதிக் கொடுக்க முடியாது என திட்டவட்டமாக கூறியதையடுத்து ஆத்திரமடைந்த சேத்தன், தந்தையின் இடது கண்ணை கைகளால் தோண்டி எடுத்து வெளியே வீசியுள்ளார். வலியில் பரமேஷ் அலறி துடிக்க அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்  சேத்தனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்