உத்தர பிரதேசத்தில் ஆற்று வெள்ளத்தில் சிக்கிய 18 தொழிலாளர் மீட்பு

உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னூர் பகுதியில் ஆற்று வெள்ளத்தில் சிக்கிய 18 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

Update: 2018-08-27 06:54 GMT
உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னூர் பகுதியில் ஆற்று வெள்ளத்தில் சிக்கிய 18 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். நஜிபாதாத் பகுதியில் சுக்ரோ எனும் ஆறு ஓடுகிறது. இங்குள்ள சிதலமடைந்த பாலத்தின் அருகே 18 தொழிலாளர்கள், பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென ஆற்றில் வெள்ளம் பாய்ந்தோடியதால், அவர்கள் தண்ணீருக்குள் சிக்கினர். இதையடுத்து, அங்கு வந்த மீட்புப்படையினர் அவர்கள் அனைவரையும் கயிறு மூலம் பத்திரமாக மீட்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்