ஓடும் ரயிலில் இருந்து இறங்கி 3 பேர் 'கிகி சேலஞ்ச்' நடனமாடியுள்ளனர்

மும்பையில் மூன்று இளைஞர்கள் ரயில் நிலைய நடைமேடையில் 'கிகி சேலஞ்ச்' நடனமாடியுள்ளனர்.

Update: 2018-08-13 07:59 GMT
மும்பையில், மூன்று இளைஞர்கள்,ரயில் நிலைய நடைமேடையில் 'கிகி சேலஞ்ச்' நடனமாடியுள்ளனர். இதனை,ஓடும் ரயிலில் இருந்து படம் பிடித்துள்ளனர்.இந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. இதையடுத்து,அந்த மூன்று இளைஞர்களை ரயில்வே காவல்துறையினர் கைது செய்தனர்.நிஷாந்த் ஷா, துருவ் ஷா,ஷ்யாம் ஷர்மா என்ற அந்த 3 பேரும், ரயில்வே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.வழக்கை விசாரித்த நீதிமன்றம், அந்த இளைஞர்கள் மூன்று பேரும்,வாசை (Vasai)ரயில் நிலையத்தை மூன்று நாள் சுத்தம் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.'கிகி சேலஞ்ச்'சாகசத்தில் பங்கேற்பவர்கள்,கைது செய்யப்படுவது இதுவே முதல்முறை.
Tags:    

மேலும் செய்திகள்