4வது கணவருடன் சென்ற பெண் - வடிவேலு நகைச்சுவையை நினைவுபடுத்தும் சம்பவம்

பெங்களூருவில் மனைவிக்காக அவரது 2 கணவர்கள் சாலையில் சண்டையிட்ட காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Update: 2018-08-06 08:26 GMT
பெங்களூருவில் மனைவிக்காக அவரது 2 கணவர்கள் சாலையில் சண்டையிட்ட காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மருதமலை படத்தில் நடிகர் வடிவேலுவின் நகைச்சுவை காட்சியை நினைவுபடுத்தும் வகையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

பெங்களூருவை சேர்ந்த சசிகலா என்ற பெண் தனது கணவர் மாதவனை பிரிந்து 10 ஆண்டுகளாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் அவருக்கு மூர்த்தி, சித்தராஜூ என்ற 2 பேருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால் 4வதாக அருண்குமாருடன் பழகி வந்த சசிகலா அவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற போது மூர்த்தி, சித்தராஜூ ஆகியோர் அவரை வழிமறித்து வாக்குவாதம் செய்தனர். பின்னர் அந்த பெண்​ணை யார் அழைத்து செல்வது என அடிதடி சண்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த 4வது நபரான அருண்குமாருடன் சசிகலா கிளம்பிச் சென்றதால் சண்டையிட்ட முதல் இரண்டு கணவர்களும் விரக்தியடைந்தனர்.

இந்த காட்சிகளை படம் பிடித்த அந்த ஊரை சேர்ந்த ஒருவர் அதை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது... 
Tags:    

மேலும் செய்திகள்