தூய்மை இந்தியா திட்டத்தை முழுமையாக நிறைவேற்றினால் மூன்று லட்சம் இறப்புகளை தடுக்க முடியும் - உலக சுகாதார நிறுவனம்
தூய்மை இந்தியா திட்டத்தை முழுமையாக நிறைவேற்றினால் மூன்று லட்சம் இறப்புகளை தடுக்க முடியும் என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
திறந்தவெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் நோய்களை தடுக்கும் வகையில், ஸ்வச் பாரத் எனப்படும் தூய்மை இந்தியா திட்டத்தை பிரதமர் மோடி 2014-இல் துவக்கி வைத்தார். அதன்படி இதுவரை 7.9 கோடி கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தூய்மை இந்தியா திட்டம் செயல்படுத்தப்படுவதற்கு முன்பு, திறந்தவெளி கழிப்பிடங்களினால் ஆண்டுக்கு சுமார் 19 கோடியே 90 லட்சம் பேர் பேர் வயிற்றுப் போக்கினால் பாதிக்கப்பட்டதாக உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.