ஊஞ்சலில் ஆடி மகிழ்ந்த கேரள அமைச்சர்
மலையாள மக்களின் முக்கிய விழாவான திருவோண பண்டிகை முன்னேற்பாடுகளை கேரள அரசு தொடங்கியுள்ளது.
மலையாள மக்களின் முக்கிய விழாவான திருவோண பண்டிகை முன்னேற்பாடுகளை கேரள அரசு தொடங்கியுள்ளது. இதற்காக சுற்றுலா துறை சார்பில் திருவனந்தபுரத்தில் சிறப்பு அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை திறந்துவைத்த சுற்றுலாத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் அலுவலக வாயிலில் அமைக்கப்பட்டிருந்த ஊஞ்சலில் ஆடி மகிழ்ந்தார். படகு போட்டி, அலங்கார ரத ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை அரசு நடத்தி வருகிறது.