"சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் பணம் 34% குறைந்தது" - மாநிலங்களவையில் நிதி அமைச்சர் பியூஷ் கோயல் தகவல்

சுவிஸ் வங்கிகளில் உள்ள இந்தியர்களின் பணம் கடந்த ஆண்டை காட்டிலும் 34 சதவீதம் வரை குறைந்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

Update: 2018-07-24 14:07 GMT
சுவிஸ் வங்கிகளில் உள்ள இந்தியர்களின் பணம் கடந்த ஆண்டை காட்டிலும் 34 சதவீதம் வரை குறைந்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர், சர்வதேச முதலீடுகளின் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த தகவல் தெரிய வந்துள்ளதாக குறிப்பிட்டார். உண்மை இவ்வாறு இருக்க, சுவிஸ் வங்களில் இந்தியர்களின் பணம் 50 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக தவறான தகவல் பரப்பப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்