பிரதமர் மோடி கலந்து கொண்ட கூட்டத்தில் விபத்து - 15க்கும் மேற்பட்ட பொதுமக்கள் படுகாயம்

மேற்குவங்க மாநிலம் மிட்னாப்பூரில் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றிக் கொண்டிருந்த போது, திடீரென்று கொட்டகை ஒன்று சரிந்து விழுந்த விபத்தில் 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

Update: 2018-07-16 13:02 GMT
மேற்குவங்க மாநிலம் மிட்னாப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது பொதுமக்கள் அமர்ந்திருந்த கொட்டகையின் ஒரு பகுதி திடீரென்று சரிந்து விழுந்தது. இதனை பார்த்த பிரதமர் மோடி, உடனடியாக பாதுகாவலர்களிடம் மீட்பு பணியை மேற்கொள்ளுமாறு மேடையிலேயே அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். படுகாயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை
பிரதமர் மோடி நேரில் சந்தித்து ஆறுதல் இந்த விபத்தில் காயமடைந்த, 15க்கும் மேற்பட்டோர் மிட்னாப்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பெற்று வருபவர்களை, பிரதமர் மோடி, நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். 
Tags:    

மேலும் செய்திகள்