இலங்கை அரசுக்கு எதிராக பேசிய விஜயகலா ராஜினாமா

விடுதலை புலிகளுக்கு ஆதரவாக பேசிய இலங்கை அமைச்சர் விஜயகலா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

Update: 2018-07-06 11:07 GMT
யா​ழ்ப்பாணத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பேசிய இலங்கை அமைச்சர் விஜயகலா, விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் பாதுகாப்பாக இருந்ததாக தெரிவித்தார். மேலும், மீண்டும் விடுதலைப் புலிகளை உருவாக்க வேண்டிய நிலை உருவாகி உள்ளதாகவும் கூறியிருந்தார். கட்சியை வளர்ப்பதில் தான் இலங்கை அதிபர்  சிறிசேனா அதிக ஆர்வம் காட்டுவதாகவும், தம்மை அதிபராக்க உதவிய மக்களுக்கு  அதிபர் சிறிசேனா உதவ தயாராக இல்லை எனவும் அரசு விழாவில்  விஜயகலா மகேஷ்வரன் பேசி இருந்தார். அவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், 4 நாட்களுக்கு பிறகு நேற்று இரவு தனது ராஜினாமா கடிதத்தை பிரதமருக்கு விஜயகலா அனுப்பினார். ஆனால், விஜயகலாவின் ராஜினாமா இதுவரை ஏற்கப்படவில்லை என கூறப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்