அரசுப்பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்புவரை சீருடை மாற்றம்: "தனியார் பள்ளிக்கு நிகராக இருக்கும்" - முதலமைச்சர் பழனிசாமி தகவல்

அரசுப்பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்புவரை சீருடை மாற்றம்: "தனியார் பள்ளிக்கு நிகராக இருக்கும்" - முதலமைச்சர் பழனிசாமி தகவல்

Update: 2018-07-01 14:47 GMT
அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு சீருடை மாற்றம் கொண்டு வரப்படும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலையரங்கம் மற்றும் கூடுதல் வகுப்பறை கட்டடங்களை திறந்து வைத்து பேசிய முதலமைச்சர், கல்வித்துறையில் அரசு செயல்படுத்தி உள்ள பல்வேறு திட்டங்களை பட்டியலிட்டார்.  மேலும் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை, படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு சீருடை மாற்றம் கொண்டு வரப்படும் என்றும், தனியார் பள்ளிகளுக்கு நிகராக இந்த சீருடை மாற்றம் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்