"புதிய பாட புத்தகங்களில் கி.மு.,-கி.பி. தொடரும்" - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

புதிய பாட புத்தகங்களில் கி.மு., கி.பி.யே தொடரும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Update: 2018-06-30 01:48 GMT
புதிய பாட புத்தகங்களில், கி.மு.,-கி.பி., என்பதற்கு பதில், பொது ஆண்டுக்கு முன், பொது ஆண்டுக்குப் பின் என சேர்க்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உறுப்பினர்கள், சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கி.மு., கி.பி. என்றே தொடரும் என பதிலளித்தார். இதுதொடர்பாக தந்தி டி.வி.க்கு பிரத்யகே பேட்டியளித்த முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் வழங்கப்பட்டுவிட்ட நிலையில், மீண்டும் கி.மு.,-கி.பி., என இடம்பெறும் என கூறுவதை பார்த்தால், அவருக்கு தெரியாமல் பாட புத்தகங்கள் அச்சிடப்பட்டதா?' என கேள்வி எழுப்பினார். 

கி.மு., கி.பி., - முதன்முதலில் செய்தி வெளியிட்ட தந்தி டி.வி.

புதிய பாட புத்தகங்களில், கி.மு.,-கி.பி., என்பதற்கு பதில், பொது ஆண்டுக்கு முன், பொது ஆண்டுக்குப் பின் என்று மாற்றப்பட்டுள்ளதாக கடந்த 25ஆம் தேதி முதன்முதலாக தந்தி டி.வி. செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

மேலும் செய்திகள்