சீன காதலர்கள் தமிழ் கலாச்சார முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்

சீனாவை சேர்ந்த காதலர்கள் சீர்காழி அருகே தமிழ் கலாச்சார முறைப்படி தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர்.

Update: 2018-06-27 03:56 GMT
சீனாவை சேர்ந்த முகமாற்று அறுவை சிகிச்சை நிபுணர் யான்சாங்காய், அழகுகலை பயிற்சியாளரான ரூபிங்கை காதலித்து வந்துள்ளார். இந்து கலாச்சாரத்தில் ஆர்வம் கொண்ட இருவரும் சீர்காழியை அடுத்த காரைமேடு சித்தர்புரத்திற்கு வந்தனர். அங்கு வேதமந்திரங்கள் முழங்க தமிழ் கலாச்சார முறைப்படி மாலை மாற்றி, தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர். மணமக்களை கிராம மக்கள் ஆசீர்வாதம் செய்து வாழ்த்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்