ஈரானில் தமிழக மீனவர்கள் 21 பேர் தவிப்பு : "தமிழக மீனவர்களை மீட்க உதவுங்கள்" - பிரதமர் மோடிக்கு, எடப்பாடி பழனிச்சாமி கடிதம்

ஈரானில் தமிழக மீனவர்கள் 21 பேர் தவிப்பு : "தமிழக மீனவர்களை மீட்க உதவுங்கள்" - பிரதமர் மோடிக்கு, எடப்பாடி பழனிச்சாமி கடிதம்

Update: 2018-06-21 13:55 GMT
ஈரானுக்கு மீன் பிடிக்க சென்று சிக்கிக்கொண்ட தமிழக மீ னவர்கள் 21 பேரை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி, பிரதமர் நரேந்திரமோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக, பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், ( Gfx - In) குமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடி மீனவர்கள் 21 பேரும் ஈரான் வியாபாரி முகமது சாலா மற்றும் அவரது சகோதரர்களால் அழைத்து செல்லப்பட்டதாக சுட்டிக்காட்டி உள்ளார். பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டு, உணவு இல்லாமலும், உரிய சம்பளம் கிடைக்காமலும் தமிழக மீனவர்கள், சாலைகளில் வசித்து வருவதாக அவர் குறிப்பிட்டு உள்ளார். எனவே, ஈரானில் தவிக்கும் தமிழக மீனவர்களை, இந்திய தூதரகம் மூலம் உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்குமாறு, ( Gfx - Out ) இந்த கடிதத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்