தமிழக அரசு பேருந்தில் இந்தியில் பெயர் பலகை - மக்கள் எதிர்ப்பு

ஈரோடு மாவட்டத்தில் இயங்கும் அரசுப் பேருந்து ஒன்றில் இந்தியில் பெயர்ப்பலகை உள்ளதால் அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Update: 2018-06-18 13:18 GMT
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள தொழிற்பேட்டைக்கு கவுந்தப்பாடியில் இருந்து பேருந்து ஒன்று இயக்கப்படுகிறது. இந்த பேருந்து நேற்று மாலை கவுந்தப்பாடி பேருந்து நிலையம் வந்த போது அதன் பெயர்ப்பலகை இந்தியில் இருந்துள்ளது. பெயர்ப்பலகையில் உள்ள வார்த்தைகள் தமிழில் இல்லாமல் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டு இருந்ததால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களிலும் உடனே வெளியிடப்பட்டது. இதனை பார்த்த பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்